ஜூலை 2014 முதல் ஆகஸ்ட் 2015 வரையிலான காலகட்டத்தில் துவங்கப்பட்ட அனைத்து வகை வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் மற்றும் KYC படிவத்தினை உடனடியாக இணைக்கும் படி வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. வெளியுறவு கணக்கு வரி இணங்குதல் சட்டத்தின்(FATCA) கீழ் துவங்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் இதனை முடிக்க வேண்டும் என்றும், மேற் சொன்ன தகவல்கள் இணைக்கப்படாத வங்கி கணக்குகள் முடக்கப்படும் எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.