சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களை ஒட்டி இன்று மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் மற்றும் டெல்லி பங்கு சந்தையின் நிஃப்டி இரண்டுமே சரித்திர சாதனை படைத்துள்ளது. கடந்த வாரமும் பருவமழை வழக்கம் போல இருக்கும் என்ற அறிவிப்பை ஒட்டி இதுவரை இல்லாத அளவு இரண்டுமே ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது. சென்செக்ஸ் 30,793.43 புள்ளிகளையும், நிஃப்டி 9,523.30 புள்ளிகளையும் தொட்டன.