பங்குச்சந்தைகள் இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக படுசரிவை சந்தித்துள்ளன.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 35,207.19 என்ற புள்ளிகளில் தொடங்கி 35,037.64 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. நேற்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 272 புள்ளிகள் சரிந்த நிலையில் இன்று 179 புள்ளிகள் குறைந்துள்ளன.
அதேபோன்று தேசிய பங்குச்சந்தை அளவீடான நிஃப்டி 10,660.80 புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 82.30 புள்ளிகள் சரிந்து 10,589.10ல் வர்த்தகமானது.
இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி, எம்&எம், தேசிய அனல்மின் கழகம் , பாரதி ஏர்டெல், கோட்டக் பேங்க், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை சிறிது அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் கோல் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, மாருதி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.