என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்குச் சந்தை மற்றும் பி.எஸ்.இ., எனப்படும், மும்பை பங்குச் சந்தை ஆகிய இரண்டு பங்குச் சந்தைகளின் இன்றைய செயல்பாடு, முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.
தேசிய பங்கு சந்தை குறியீட்டெண், நிப்டி, இன்றைய வர்த்த நேர முடிவில், 51 புள்ளிகள் உயர்ந்து, 10,855ஆக பதிவானது. மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், 231 புள்ளிகள் உயர்ந்து, 36, 212 ஆக பதிவானது.
நிப்டி - 50ல், ஆக்சிஸ் பேங்க், ஐ.டி.சி., டாடா மாேட்டார்ஸ், யு.பி.எல்., மற்றும் எச்.டி.எப்.சி., நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், கெயில், பி.பி.சி.எல்., எஸ்பேங்க் நிறுவன பங்குகளின் விலையில் சரிவு ஏற்பட்டது.
newstm.in