சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை காலையில் ரூ.184 உயர்ந்த நிலையில், தற்போது ரூ.40 உயர்ந்துள்ளது.
மாலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.29,136-க்கும், கிராமிற்கு ரூ.3,642-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் ரூ.29 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.30,392-க்கும், கிராமிற்கு ரூ.3,799-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.52-க்கும், கிலோ ரூ.52,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
newstm.in