பா.ரஞ்சித்தை சந்தித்த அனுராக் காஷ்யப் "இந்திய அளவில் தலித் அரசியலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் துணிச்சலாக பேசக்கூடிய படைப்பாளியான உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்" என்றும் தனது விருப்பத்தினை தெரிவித்திருக்கிறார்.
ரஜினிகாந்தின் நடிப்பில் காலா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித். இவரின் கடந்த ஆண்டு படைப்பான பரியேறும் பெருமாள் இன்று வரை பல விருதுகளை குவித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் பாலிவுட் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் காட்டி வரும் அனுராக் காஷ்யப். ரஞ்சித்துக்கு சாமீபத்தில் மும்பையில் விருந்தளித்துள்ளார்.
அப்பொழுது ரஞ்சித்திடம் "இந்திய அளவில் தலித் அரசியலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் துணிச்சலாக பேசக்கூடிய படைப்பாளியான உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்" என்று தனது விருப்பத்தினை தெரிவித்திருக்கிறார் அனுராக் காஷ்யப். இவர் நயன் தாரா நடிப்பில் திரைக்கு வந்த இமைக்கா நோடிகள் திரைப்படத்தில், மித்ரன் கதாபாதிரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in