'வந்தா ராஜாவா தான் வருவேன்' திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்னாயகியாகவும், இப்படத்திற்கான இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவும் ஒப்பந்தமாகியுள்ளனர். நீண்ட நாட்கள் காத்திருப்பிற்கு, பிறகு மாநாடு படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in