வாழ்க்கையில் எதை நாம் சம்பாதிக்கிறோமோ இல்லையோ ,மன தைரியத்தை அவசியம் சம்பாதிக்க வேண்டும். அந்த மனோ தைரியத்தை தருபவர் தான் அஞ்சனை மைந்தன் அனுமான். தினமும் மனதையும் உடலையும் சுத்தி செய்துக்கொண்டு இந்த ஸ்லோகத்தை சொல்வதால் தேக பலத்துடன்,மனோ பலத்தையும் பெறலாம்.
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்
பொருள் :
புத்திர் பலம் - அறிவில் வலிமை
யசோ - புகழ்
தைர்யம் - துணிவு
நிர்பயத்வம் – பயமின்மை
அரோகதா - நோயின்மை
அஜாட்யம் - ஊக்கம்
வாக் படுத்வம் - பேச்சு வலிமை
ச - இவையெல்லாம்
ஹனூமத் ஸ்மரணாத் - அனுமனை நினைப்பதால்
பவேத் - பிறக்கின்றன.