வீட்டில் பூஜை செய்யும் போதும்,திருக்கோவிலில் இறைவனுக்கு அபிஷேகம், தூப தீபம், நைவேத்யம், கற்பூர ஆரத்தி காட்டும் போதும் மணியடிப்பது அவசியம். அப்போது இந்த மந்திரத்தை சொல்லும் போது அந்த இடத்திலும் நம் மனதிலும் இறை சக்தி நிறைந்து இருக்கும்.
“ஆக மார்தம்து தேவானாம் கமநார்தம் து ரக்ஷஸாம்
குர்வே கண்டா ரவம் தத்ர தேவதா ஆஹ்வான லாஞ்சனம்”
பொருள்
“தேவர்களை வரவேற்பதற்காகவும், பூஜை செய்யுமிடத்தில் இருக்கும் கண்களுக்குப் புலப்படாத தீய அல்லது அசுர சக்திகளை விலக்குவதற்காகவும் இந்த மணியோசையை எழுப்புகிறேன்