தாய்லாந்தில் உள்ள குன்ஹான் எனும் சிறிய நகரத்தில் தான் இந்த பீர் பாட்டில் புத்தர் கோயில் உள்ளது. 14- ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயில் 1939-ஆம் ஆண்டு தான் வெளி உலகிற்கு தெரிய வந்தது. உலகில் அன்பும், கருணையும் பெருகி மக்கள் அனைவரும் அமைதியோடு வாழவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த கோயில் கட்டப்பட்டதாக கூறப் படுகின்றது. ஆயிரக்கணக்கான பீர் பாட்டில்களை கொண்டு உருவாக்கப் பட்டிருக்கும் இந்த கோயிலில் புத்தர் சிலையும் கூடவே சிரிப்பு புத்தர் சிலையும் உள்ளது.