நாம் தினமும் பல் தேய்க்கப் பயன்படுத்தும் பற்பசைகளில் பல விதமான வேதிப்பொருட்கள் கலந்து இருக்கின்றன. அதில், முக்கியமானது மற்றும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது தான் ஃபுளோரைடு. இந்த வேதி பொருள் நம் உடலில் அதிகம் சேரும்போது இதயம் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இதைத் தவிர்ப்பதற்காக தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி பற்பசை தயாரிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
தேங்காய் எண்ணெயில் உள்ள சில மருத்துவ குணங்கள் நம் குடல் மற்றும் வயிற்று பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகின்றதாம். அது மட்டுமில்லாமல், காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி "ஆயில் புல்லிங்" செய்தால் வயிற்று உபாதைகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.