கோடைக்காலம் என்பதால் அதிகமாக வியர்க்கும். அதிலும் என்ன தான் நன்கு குளிர்ச்சியான நீரில் குளித்துவிட்டு வந்தாலும், உடனே வியர்வை வெளியேற ஆரம்பிக்கும். அவ்வளவு மோசமான காலம் தான் கோடைக்காலம். கோடைக்காலத்தில் இப்படி வியர்க்கும் போது, அந்த வியர்வையை துடைக்காமல் உடலில் அப்படியே காய வைப்பதால் ஒருசில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
* வியர்வை உடலில் காயும் போது, அது ஆரம்பத்தில் அரிப்பை உண்டாக்கி பின் தடிப்புக்களை ஏற்படுத்தும். மேலும் இது மடிப்புகள் உள்ள பகுதிகளில் தான் ஏற்படும்.
*அதிகமாக வியர்வை வெளியேறும் போது, ஃபேனிற்கு கீழே அமராதீர்கள் இதனால் நீங்கள் உடுத்தி இருக்கும் ஆடையில் வியர்வை காயும் போது அது நாள் முழுவதும் நம்மீது துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
* வியர்வை அளவுக்கு அதிகமாக வெளியேறும் போது, வியர்க்குரு வர ஆரம்பிக்கும். இதற்கு காரணம் வியர்வை உடலில் அப்படியே காயும் போது, அது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை உறிஞ்சி, வியர்க்குருவை உண்டாக்கும்.