சர்க்கரை நோயாளிகள் தங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்வதற்காக இன்சுலின் ஊசிகள் போடுவது வழக்கம். ஆனால் இனி இந்த ஊசிகளுக்கு அவசியம் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுநாள் வரை ஊசி மூலம் ஏற்றப்பட்டு வந்த இன்சுலின் இனி மாத்திரை வடிவில் கிடைக்க உள்ளது. லிப்பிட் எனும் நுண்பொருளை அடிப்படையாக கொண்ட Cholestosomes-ஐ கொண்டு இன்சுலினை மாத்திரை வடிவில் உருவாக்கி உள்ளனர். இதனால் இன்சுலின் வயிற்றிலேயே தங்கி விடாமல் ரத்தத்தில் கலந்து சர்க்கரை அளவை சமனில் வைத்திருக்க உதவும் என தெரிவித்துள்ளனர்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.