உடலில் திசுக்கள் மற்றும் உறுப்புகள் சரியாக இயங்க போதிய அளவு தண்ணீர் வேண்டும். வேர்வை, சிறுநீர், மற்றும் மூச்சு ஆகியவற்றின் மூலம் இழக்கும் தண்ணீரை ஈடுகட்ட வேண்டும். இதே தண்ணீரை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் என்னவாகும்? முதலில் மூளை சரிவர இயங்காது. மேலும் தலைவலி, வாந்தி போன்றவை வரலாம். மிக மிக அதிகமாக எடுத்துக் கொண்டால் உயர் ரத்த அழுத்தம், குழப்பம், ரெட்டை காட்சி தோற்றம், தலைச்சுற்று, மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் தசை பிடிப்பு போன்றவை பக்கவிளைவுகளாக வரலாம். எனவே அளவோடு தண்ணீர் பருகினால் உடல் நலம் சீராக இருக்கும்.