பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகா் மணிலா அருகேயுள்ள லுஸான் தீவில் இன்று மாலை 6.1 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகா் மணிலா அருகேயுள்ள லுஸான் தீவில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமியின் அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் லுஸான் தீவில் உள்ள பல கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகள் மற்றும் திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர். இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
newstm.in