நேபாள நாட்டில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 28 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேபாள தலைநகர் காத்மண்டுவிலிருந்து காக்கர்விட்டா என்ற இடத்தை நோக்கி இன்று காலை பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. தாடிங் மாவட்டத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்கிருந்த திரிசூலி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 28 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in