பிரதமர் நரேந்திர மாேடி அரசுமுறைப் பயணமாக மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு முழு அரசு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மக்களவை தேர்தலில் பா.ஜ., பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மாேடி, தொடர்ந்து 2வது முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், இரண்டவாது முறையாக பிரதமர் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மாேடி, முதல் முறையாக மாலத்தீவு நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அந்நாட்டு தலைநகர் மாலேவில், பிரதமர் நரேந்திர மாேடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு ராஜாங்க நடவடிக்கைகளின் படி, ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி, பிரதமர் நரேந்திர மாேடியை வரவேற்றார். இரு நாட்டு தலைவர்களும் முக்கிய ஒப்பந்தங்கள், இரு நாட்டு உறவுகள், வர்த்தம் குறித்து பேச்சு நடத்த உள்ளனர்.
newstm.in