காஷ்மீர் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்திலிருந்து லாரன் பகுதிக்கு பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று ப்ளேரா என்ற இடத்தில் வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பெரிய பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்த சென்ற காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in