ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 150 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு ரயில் நிலையம் அருகே மராத்தா மோஹலா என்ற இடத்தின் அருகே நேற்று இரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
இந்த தீவிபத்தில் அந்த பகுதியில் இருந்த 150 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. காற்று வேகமாக வீசியதால் தீமளமளவென பரவியது.
இது குறித்து அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் கூறுகையில், தீயணைப்பு படையினருக்கு தகவல் தந்த ஒரு மணி நேரத்திற்கு பின் தான் வந்தனர். இதனால் அப்பகுதியில் இருந்த அனைத்து குடிசைகளும் சாம்பலாயின என்றனர்.
newstm.in