உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள யமுனா விரைவுச்சாலையில் இரண்டடுக்கு பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே யமுனா விரைவுச்சாலையில் நொய்டாவிலிருந்து பிந்த் என்ற பகுதிக்கு இரண்டடுக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
கர்லாவ்சி என்ற கிராமத்தின் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் பேருந்தில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்த மதுரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in