கர்நாடக மாநிலத்தில் ரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத இயலாத 500 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இத்தேர்வினை எழுத மறு வாய்ப்பு அளிக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ஹம்பி விரைவு ரயில் தாமத்தால் 500 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுத முடியவில்லை என்று அம்மாநில முதல்வர் குமாரசாமி புகார் கூறியிருந்தார்.
இந்த நிலையில், "ரயில் தாமத்தால் நீட் தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு, இத்தேர்வை எழுத மறுவாய்ப்பு வழங்கப்படும்" என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரகாஷ் ஜவடேகரின் இந்த அறிவிப்பு தேர்வை எழுத இயலாத மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in