புனேவில் ஆடை தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஊழியர்கள் தீயில் கருகி பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள உருளி தேவாச்சி (Uruli Devachi) என்ற கிராமத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில், இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரவுப்பணி முடிந்து சில ஊழியர்கள் அங்கே உறங்கிக்கொண்டு இருந்துள்ளனர். தீ பற்றி எரிவதை அறிந்து, சிலர் விழித்துக்கொண்டதால் காயத்துடன் தப்பினர். இருந்தும் அங்கிருந்த 5 ஊழியர்கள் தீயில் கருகி பலியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 4 தீயணைப்பு வாகனங்கள் அவ்விடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்தில் தற்போது போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in