வருகிற 2019ல் நடைபெறும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 2 தேர்தல்களிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை எனவும் இது கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு எனவும் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். இதன் மூலம் 28 ஆண்டு கால பாஜக கூட்டணிக்கு சிவசேனா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.