மத்திய இணையமைச்சராக இருந்து வரும் பொன்.ராதாகிருஷ்ணன் 5வது முறையாக நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டார். தற்போதைய மக்களைத் தேர்தலில் சுமார் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ள நிலையில், டெல்லி தலைமையகத்திலிருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது.
தமிழகத்தில் போட்டியிட்ட 5 பாஜக வேட்பாளர்களும் தோல்வியடைந்த நிலையில், இவருக்கு மட்டும் அழைப்பு விடுத்துள்ளது கேள்விக்குறியாகியுள்ளது. மீண்டும் அமைச்சராகிறாரா பொன்னார் என வதந்திகளும் பரவி வருகின்றன.