பிரதமர் நரேந்திர மாேடி, தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்க உள்ள நிலையில், அவரது தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவில், காங்., தலைவர் ராகுலும் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலில், பா.ஜ., பிரமாண்ட வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மாேடி தலைமையில், மத்தியில் மீண்டும் பா.ஜ., ஆட்சி மலர்கிறது. தொடர்ந்து இரண்டாவது, நரேந்திர மாேடி, நாளை மீண்டும் பிரதமர் பதவியேற்கிறார். அவருடன், அவரது அமைச்சரவை சகாக்களும் பதவியேற்கவுள்ளனர்.
இதற்காக வெளிநாட்டு தலைவர்கள் மட்டுமின்றி, நாட்டின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அந்த கட்சித் தலைவர் ராகுல், தன் கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதாக கூறினார்.
இதை ஏற்க மறுத்து, காங்., தலைவர்கள், தொண்டர்கள் தொடர்ந்து அவரே தலைவர் பதவி வகிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மாேடியின் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ள மாட்டார் என அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் தலைவர் சாேனியா, மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் பங்கேற்பர் என செய்தி வெளியானது. இந்நிலையில், காங்., தலைவர் ராகுலும் நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்பர் என தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in