இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளின் நல்லுறவுக்காக இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன் என்று தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ள பிரதமர், அதிபர் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்காக இலங்கை மக்களுக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, தனக்கு வாழ்த்து கூறிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த கோத்தபய ராஜபக்சே, இந்தியாவும், இலங்கையும் வரலாறு மற்றும் பொதுவான நம்பிக்கைகளால் பிணைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
newstm.in