இனப்பெருக்க காலத்தில் பறவைகள் கண்டம் விட்டு கண்டம் போவதுண்டு. அதுபோலவே, அட்லாண்டிக் கடலில் வாழும் "ஷான்னிஸ்" என்ற மீன் இனமும் இடம்பெயர்வதாக கடல்வாழ் உயிரின ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.இம்மீன் இனம் கடலடியில் உள்ள பாறைகளுக்குள் கூடுகள் ஏற்படுத்தி இனப்பெருக்கம் செய்கின்றன.இதில் வியப்பளிக்கும் விஷயம், சென்றமுறை கட்டி வைத்த அதே கூட்டிற்கே, ஓர் ஆண்டு கழித்து அவைகள் சரியாக திரும்பி வருகின்றன. அலைகளின் வேகம், நீர்சூழற்சி போன்றவற்றை வைத்து திரும்ப வரலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். கடல் ஆமைகளும் இதுபோல் செய்வதுண்டு.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.