அணுஉலைகளின் கதிரியக்க கழிவுகளால் சுற்றுசூழலில் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதோடு மனித இனத்திற்கும் பேரழிவுகள் உண்டாகின்றது. இதனை பூமிக்கடியில் புதைத்து வைத்து பத்திரப்படுத்துவதற்கு கோடி கணக்கில் செலவு செய்யப்படுகின்றது. உலகெங்கும் ஒரு ஆண்டிற்கு 2 லட்சம் கன. மீ கதிரியக்க அணு கழிவுகள் உருவாகின்றன. இதில் உள்ள புளூட்டோனியம் என்ற வேதிப்பொருளை மறுசுழற்சி செய்வதன் மூலம் கண்ணாடி உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் 85 முதல் 90% வரை கழிவுகளை நீக்குவதற்கான செலவுகள் குறைக்கப்படும். ஆபத்துகளும் குறைக்கப்படும்.