ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்புப்படி ஒரு சதுர கி.மீ கடல் பரப்பில் 46,000 மிதக்கும் தன்மையுள்ள கழிவுப்பொருட்கள் இருப்பதாகவும், இதனால் ஆண்டிற்கு 10 லட்சம் கடற்பறவைகளும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் அழிவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, ஜெர்மனைச் சேர்ந்த புகழ் பெற்ற காலணிகள் தயாரிக்கும் ADIDAS நிறுவனம் அந்த கழிவிலிருந்து காலணிகள் தயாரிக்க திட்டமிட்டு, வெற்றியும் பெற்றுள்ளது. 3-டி பிரிண்டிங் முறையில் 7 ஆயிரம் ஜோடி காலணிகள் உருவாக்கப்பட்டு ஆன்-லைன் விற்பனைக்கு தயாராக உள்ளன.