மனித உடலின் முக்கிய உறுப்பாக இருக்கும் மூளையின் செயல்பாடுகளுக்கு உதவியாக இருப்பது அதன் ஹிப்போகேம்பஸ் பகுதி தான். நம்முடைய நினைவுகள் அனைத்தும் இந்த பகுதியில் தான் சேமிக்கப்படுகின்றது. இதில் பிரச்சனைகள் ஏற்படும் போது அல்சைமர் எனும் நியாபக மறதி நோய் உண்டாகின்றது.
இந்த நோய்க்கான தீர்வு நாம் பிறக்கும் போது நம் உடலில் இருந்து நீக்கப்படும் தொப்புள் கொடியில் இருக்கும் இரத்த திசுவில் இருப்பதாக நரம்பியல் வல்லுநர்கள் கண்டறிந்து உள்ளனர். தொப்புள் கொடியில் உள்ள Metalloproteinases 2 (TIMP2) என்ற திசு நரம்பியல் செயல்பாடுகளை அதிகரிக்கின்றது என எலிகளை வைத்து சோதித்து பார்த்ததில் தெரிய வந்துள்ளது. ஆரம்ப கட்டத்தில் இருக்கும் இதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்து நிகழும் என்றும் அல்சைமருக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.