ஜப்பானைச் சேர்ந்த 'ஊகூ' என்ற ஆராய்ச்சி நிறுவனம் கடற்பாசிகளை கொண்டு தண்ணீர் பந்துகளை தயாரித்து உள்ளது. இந்த தண்ணீர் பந்துகளில் உள்ள தண்ணீருடன் சேர்த்து இந்த பந்தையும் சாப்பிடலாம். பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களால் உண்டாகும் குப்பைகள் மற்றும் சுற்றுசூழல் மாசுபாட்டை குறைப்பதற்காவே இந்த தயாரிப்பு முயற்சியை மேற்கொண்டதாக இந்நிறுவனத்தார் கூறுகின்றனர். கடந்த 2014-ல் இதற்கான முயற்சி தொடங்கி, தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ள இந்த திட்டத்திற்கு இப்போது வரை 1000 முதலீட்டார்கள் உள்ளனர்.