எய்ட்ஸ் வந்தால் மரணம்தான் என்ற நிலை விரைவில் மாறும் என்கின்றனர் லண்டனைச் சேர்ந்த சில மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். எச்.ஐ.வியை குணப்படுத்த இவர்கள் உருவாக்கியுள்ள மருந்தை தற்போது சோதனை செய்து வருகிறார்கள். எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட பலரிடம் நடத்திய சோதனையில் ஒரு 44 வயதான நபரின் இரத்த மாதிரிகளில் எச்.ஐ.வி கிருமி முற்றிலுமாக அழிக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த சோதனையில் தாங்கள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், இன்னும் சில ஆண்டுகளில் எச்.ஐ.வி கிருமிக்கான மருந்தை கண்டுபிடித்து விடுவோம் என்றும் கூறியுள்ளனர்.