பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்து வரும் ஒலிம்பிக்கில், ஆடவர் பிரிவிற்கான சைக்கிளிங் போட்டி நடைபெற்ற ரேஸ் கோர்ஸ் சாலையில், பினிஷிங் லைன் அருகே திடீரென பலத்த சத்தத்துடன் வெடிகுண்டு சத்தம் கேட்டதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். இந்தப் பரபரப்பு காரணமாக சைக்கிளிங் போட்டிக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. தீவிரவாதிகள் ஏற்கனவே வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என அச்சுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.