உலகக்கோப்பை தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கேப்டன் கோலி அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 228 என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இந்த நிலையில், ரன் மெஷின் என்றழைக்கப்படும் கேப்டன் கோலி 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பெலுக்வாயோ பந்துவீச்சில் அவுட் ஆனார். கோலியின் கேட்ச்சை டி காக் அற்புதமாக பிடித்தார். இதையடுத்து, ராகுல் களமிறங்கியுள்ளார். முன்னதாக, 6-ஆவது ஓவரில் தவானை ரபடா சாய்த்தார். ரோஹித் ஷர்மா 31 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
ஸ்கோர் நிலவரம்: 62/2, 17 ஓவர்களின் முடிவில்
newstm.in