ஐ.பி.எல் போட்டியில் இருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாதின் பில்லி ஸ்டான்லேக் விலகி உள்ளார்.
கடந்த 22ந் தேதி சென்னை அணியுடன் ஹைதராபாத் மோதிய போட்டியில் ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கையில், பில்லிக்கு வலதுகையின் சுண்டு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை பரிசோதித்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் எலும்பியல் நிபுணர்கள், பில்லி ஸ்டான்லேக்கை ஐ.பி.எல் போட்டியில் இருந்து விலகி ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் தொடரில் இருந்து வெளியேறியதாகவும், விரைவில் பில்லி குணமடைய விரும்புவதாகவும் ட்விட்டரில் ஹைதராபாத் அணி குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பில்லி, நாடு திரும்பியுள்ளார். மேலும் இதனால் ஒட்டுமொத்த ஐ.பி.எல் போட்டியில் இருந்தும் விலகிவதாக பில்லி அறிவித்துள்ளார்.