ஆஸ்திரேலியா ஓபன் போட்டியில் இருந்து இந்திய ஆண்கள் இரட்டையர் இணை தோல்வி கண்டு வெளியேறியது.
சிட்னியில் ஆஸ்திரேலியா ஓபன் பேட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய போட்டியாளர்கள் காலிறுதிக்குள்ளாகவே தோல்வி அடைந்து வெளியேறினர். இதனிடையே ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியா ஜோடி அரையிறுதி வரை முன்னேறியது. 39 நிமிடங்கள் நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் மனு அத்ரி - சுமித் ரெட்டி இணை 17-21, 15-21 என்ற கணக்கில் இந்தோனேசியாவின் பெற்ரி ஆங்கிரியாவான் - ஹார்டின்ட்டோ இணையிடம் வீழ்ந்தது.