சென்னையில் வருமானவரித் துறையினர் வைத்த சீல் உடைக்கப்பட்டது குறித்து பைனான்சியரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை புரசைவாகத்தை சேர்ந்தவர் சுசீல். பைனான்சியரான இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொள்வதற்காக சீல் வைத்து சென்றுள்ளனர். இந்நிலையில், வருமானவரித் துறையினர் வைத்த சீல் உடைக்கப்பட்டு அறையில் இருந்த கணினி மற்றும் ஹார்டுடிஸ்க் திருடு போயுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், பைனான்சியர் சுசீலிடம் வேப்பேரி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in