சென்னையில் மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னையில் வசித்து வருபவர் ஷாயின்சா (45). இவர் பக்கத்து வீட்டில் வசித்து வரும் மனவளர்ச்சி குன்றிய சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் தட்டிக்கேட்டபோது, கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் சார்பில் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையறிந்த ஷாயின்ஷா தலைமறைவாகியுள்ளார். எம்.கே.பி நகர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.
newstm.in