ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 9 நாட்களுக்கு பிறகு இன்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 2ஆம் தேதி முதல் கடல் சீற்றமாக இருந்தது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடந்த 9 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் கடல் சீற்றம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து, 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
newstm.in