தமிழகத்தில் தற்காலிக அரசு செவிலியர்களுக்கான ஊதியத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்காலிக அரசு செவிலியர்களுக்கான ஊதியம் ரூ. 7,700 இல் இருந்து ரூ. 14 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்த ஊதிய உயர்வு 1.4.2018 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தற்காலிக செவிலியர்களுக்கு இனி ஆண்டுதோறும் ரூ.500 ஊதிய உயர்வாக அளிக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக செவிலியர்களுக்கு ஊதிய உயர்வுடன் இ.எஸ்.ஐ., பி.எப் திட்ட தொகையும் செலுத்தப்படவுள்ளது. ஊதிய உயர்வால் தொகுப்பூதியம் பெறும் 12000 செவிலியர்கள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது.