தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவடைகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா புஷ்கரம் விழா தாமிரபரணி நதிக்கரையில் கடந்த 11 ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க தமிழக மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் சென்று தாமிரபரணி ஆற்றில் புண்டித நீராடினர். இந்நிலையில் தாமிரபரணி மகா புஷ்கரணி விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. விழாவின் 11வது நாளான நேற்று ஒரே நாளில் மட்டும் 6 லட்சத்து 35 ஆயிரத்து 361 பேர் புனித நீராடினர். கடந்த 10 நாட்களில் சுமார் 50 லட்சம் பேர் தாமிரபரணியில் நீராடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Newstm.in