சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் திரும்புவதற்கு வசதியாக நாளை முதல் ஏப்ரல் 21 வரை 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுப்போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. வெளியூர்களுக்கு சென்ற பொதுமக்கள் சென்னை, கோவை, மதுரை ஆகிய பகுதிகளுக்கு திரும்பி வர ஏதுவாக பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும், சித்ரா பவுணர்மியை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று முதல் நாளை முடிய சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அரசுப்போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
newstm.in