மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிசாமியின் மரணம் குறித்த வழக்கை, சிபிசிஐடி விசாரணக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவன காசாளராக பணிபுரிந்து வந்தவர் பழனிசாமி. மார்ட்டின் நிறுவனத்தில் வருமானவரித்துறை விசாரணை முடிந்த அடுத்த நாள்(மே.4) காரமடை அருகே உள்ள குட்டையில் காசாளர் பழனிசாமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. தொடர்ந்து. பழனிசாமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது மகன் ரோஹித் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்..
இந்நிலையில், காசாளர் பழனிசாமியின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரோஹித் குமார் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், அந்த மனுவில் தந்தையின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும், பிரேத பரிசோதனையின்போது தங்கள் தரப்பு மருத்துவரையும் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு நீதிபதிகள் பேசுகையில், "இந்த வழக்கு மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதால் சிபிசிஐடி விசாரணை தேவை இல்லை.
மேலும் பழனிசாமியின் உடலை மறு பரிசோதனை செய்யவேண்டுமா என்பதை மாஜிஸ்திரேட் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பார். அதன் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும். ஒருவேளை மாஜிஸ்திரேட்டின் ஆய்வு மனுதாரருக்கும் திருப்திகரமாக இல்லை என்றால் அவர் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம்" என்று கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
newstm.in