தமிழகத்தில் மே 23-ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையையொட்டி தமிழகத்தில் மே 23-ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று உத்தரவிட்டுள்ளார்.
newstm.in