வேலூர் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது. அதிமுக கூட்டணி கட்சி சார்பில் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சண்முகசுந்தரத்திடம் தனது வேட்பு மனுவை அளித்தார்.
புதிய நீதிக்கட்சி தலைவராக ஏ.சி.சண்முகம் வேலூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடயிருப்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in