கொல்லிமலை வல்வில் ஓரி விழா நடைபெறுவதை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்திற்கு வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கடையெழு வள்ளல்களில் ஒருவரான மன்னர் வல்வில் ஓரியை சிறப்பிக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டிற்கான வல்வில் ஓரி விழா வருகிற ஆகஸ்ட் 2 & 3 தேதிகளில் நடைபெறுகிறது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்திற்கு வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
newstm.in