மேகதாது அணை விவகாரம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
காவிரியின் குறுக்கோ கர்நாடக அரசு மேகதாது அணையை கட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும், காவிரியில் மேகதாது உள்ளிட்ட எந்த திட்டத்திற்கும் தமிழக அரசின் அனுமதியின்றி ஒப்புதல் அளிக்க கூடாது எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Newstm.in