விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே குயிலாப்பாளையம் பகுதியில் சுந்தரமூர்த்தி என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடன் பிரச்னையால் நான்கு பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in