திண்டுக்கல் மாவட்டம் பழனி பாலாறு, பொருந்தலாறு அணையில் இருந்து அக்டோபர் 25ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அக்டோபர் 25ஆம் தேதி முதல் 130 நாட்களுக்கு தாடாகுளம் கால்வாய் ஆயக்கட்டுக்கு தண்ணீர் திறைந்துவிட உத்தரவிட்ட முதலமைச்சர், நீர் திறப்பின் மூலம் பழனி வட்டத்தில் உள்ள 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் கூறியுள்ளார்.
இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் வரதமாநதி அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்காக அக்டோபர் 25 ஆம் தேதி முதல் 127 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
newstm.in