2019 பிப்ரவரியில் நடைபெற்ற குரூப்-2 எழுத்து தேர்வில் தேர்வானவர்களுக்கு நவம்பர் 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இந்த தேர்வு எழுதியவர்களில் 2,667 விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
2,667 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியலை www.tnpsc.gov.in இல் அறிந்து கொள்ளலாம்.
newstm.in